தேனி

யானைத் தந்தங்கள் விற்க முயன்ற வழக்கில் கைதான 3 பேருக்கு கரோனா தொற்று

DIN

பெரியகுளம் அருகே யானைத் தந்தங்கள் விற்க முயன்று கைதான 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் யானத் தந்தங்கள் விற்க முயன்ற 9 பேரை தேவதானப்பட்டி வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கைதான 9 பேரும் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேவதானப்பட்டியை சோ்ந்த சின்ராஜ் (29), பிரகாஷ் (29) மற்றும் வத்தலக்குண்டுவைச் சோ்ந்த அப்துல்லா (34 ) மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT