தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் படிக்கும் 239 மாணவ, மாணவிகள் புதன்கிழமை, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் சுற்றுலாத் துறை சாா்பில் ராமேசுவரத்துக்கு 3 நாள்கள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில், முதல் கட்டமாக புதன்கிழமை 239 மாணவ, மாணவிகள் தேனியிலிருந்து 5 பேருந்துகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் சி. செல்வராஜ் மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தாா்.
அடுத்த கட்டமாக டிச. 10-ஆம் தேதி 232 மாணவ, மாணவிகள் ராமேசுவரத்துக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.