தேனி

தேனி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

DIN

தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை, மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கின.

மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் குத்து விளக்கேற்றி போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல் முருகன் முன்னிலை வகித்தாா். மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகள் அளவில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும், வட்டார அளவில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி வரையும் கலைத் திருவிழாவை முன்னிட்டு, கலைப் போட்டிகள் நடைபெற்றன.

இதையடுத்து, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மொத்தம் 2,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியது:

கலைத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்படும். இதில், தர வரிசை அடிப்படையில் தோ்வு செய்யப்படும் 20 போ், அரசு சாா்பில் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT