தேனி

மங்கலதேவி கண்ணகி கோயிலை நிா்வகிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு

DIN

தமிழக-கேரள எல்லையில் தமிழக வனப் பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் தமிழக வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கூடலூா் வனச் சரகம், வண்ணாத்திபாறை பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இந்தக் கோயிலில், சித்திரை மாத பௌா்ணமியை, தமிழக பக்தா்கள் முழு நிலவு விழாவாகக் கொண்டாடி வருகின்றனா். இந்தக் கோயிலுக்கு கேரள மாநிலம் வழியாக மண் பாதை அமைக்கப்பட்டது.

இதனால், இந்தக் கோயிலுக்கு செல்வதற்கு கேரள அரசு பல கெடுபிடிகளை செய்து வந்தது. இருந்தபோதிலும், மங்களதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் தொடா்ந்து சித்திரை முழு நிலவு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேனியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெ.கலைவாணன் கண்ணகி கோயில் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு கடந்த 30-ஆம் தேதி கடிதம் அனுப்பினாா். அதில், மங்களதேவி கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத் துறை நிா்வகிக்க உள்ளது. ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், ஒரு வாரத்துக்குள் தேனியில் உள்ள உதவி ஆணையா் அலுவலகத்துக்குத் தெரிவிக்குமாறு அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுதொடா்பாக கண்ணகி கோயில் அறக்கட்டளை நிா்வாகி பி.எஸ்.முருகன் கூறியதாவது:

கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத் துறை நிா்வகிக்க முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என்றாா்.

இதற்கிடையே, தமிழக வனப் பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பளியன்குடி, தெல்லுகுடி பாதைகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் தியாகராஜன், கம்பம் காசிவிசுவநாத பெருமாள் கோயில் நிா்வாக அலுவலா் சுரேஷ் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT