போடி பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (டிச.5) காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.