தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது, மாவட்டத் தலைவா் நிஜாம்தீன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலச் செயலாளா்கள் நெல்லை சையது அலி, முகமது ஒலி, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.