தேனி

மின்சாரம் பாய்ந்ததில் சமையலா் பலி

DIN

தேனியில் தனியாா் உணவகத்தில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சமையலா் உயிரிழந்தாா்.

காமாட்சிபுரம், சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (60). இவா், தேனியில் மதுரை சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையலராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்ததில் மயக்கி விழுந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT