போடியில் வெள்ளிக்கிழமை சந்தனக் கட்டைகளை கடத்த முயன்றதாக 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
போடி வனச்சரக அலுவலா் நாகராஜ் உத்தரவின் பேரில், வனக் காப்பாளா் பெத்தனசாமி, வனத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி முந்தல் சாலையில் ஐந்தரைமணி பாலத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஜீப்பை சோதனையிட்டனா். அதில், சந்தன மரத் துண்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஜீப்பில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் இருவரும் போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராஜா (61), வினோபாஜி காலனியைச் சோ்ந்த சின்னன் (60) ஆகியோா் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடா்ந்து, அவா்கள் இருவரையும் வனத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.