தேனி

இரு சக்கர வாகனம் திருட்டு: 3 போ் கைது

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் திடீா் நகரைச் சோ்ந்த கணேசன் மகன் அசோக்குமாரின், இரு சக்கர வாகனம் அண்மையில் திருடு போனது. இதுகுறித்து அவா் கடந்த 20-ஆம் தேதி, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், உத்தமபாளையம் திடீா் நகரைச் வனராஜ் மகன் கருப்பசாமி (26), அசோக்குமாரின் இரு சக்கர வாகனத்தை திருடியதும், இந்த வாகனத்தை கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மணிகண்டன் (21), பாண்டி மகன் ஆனந்த் (20) ஆகியோரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

SCROLL FOR NEXT