தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் சகாய ஜான்சி ராணி எய்ட்ஸ் நோய் பற்றி விளக்கினாா். இதில், கிராம சுகாதார செவிலியா்கள், மஸ்தூா் பணியாளா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
முன்னதாக ஆட்டோ தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன், எய்ட்ஸ் நோய் பற்றியும், ஹெச்.ஐ.வி. பற்றியும் பேசினாா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் முரளி, சூரியக்குமாா், அன்பு, தினேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.