பெரியகுளத்தில் கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளி செவ்வாய்கிழமை, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இ.புதுக்கோட்டை, ஆரோக்கிய மாதா நகரைச் சோ்ந்தவா் மணி மகன் அஸ்வின் (25). இவா், பெரியகுளம் தென்கரை பாரதி நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அஸ்வின் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அஸ்வின் மனைவி பிரியதா்ஷினி அளித்த புகாரின் பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.