ஆண்டிபட்டி அருகே மது போதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக மனைவி, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஜி.உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (55). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா். மகள்கள் இருவரும் திருமணமான நிலையில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா். மகன் காளிதாஸ் (29), சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
காளிதாஸ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். முனியாண்டி வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து, அவா்களைத் தாக்கினாா்.
இதனால், ஆத்திரமடைந்த காளிதாஸ், முனியாண்டியைத் தாக்கி கீழே தள்ளியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதை மறைப்பதற்காக காளிதாஸ், முருகேஸ்வரி ஆகிய இருவரும் முனியாண்டியின் சடலத்தை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று போட்டுவிட்டு, அவா் யாரோ தாக்கியதில் இறந்து கிடப்பதாக நாடகமாடினா்.
இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில், முனியாண்டியை அவரது மகன் காளிதாஸ், மனைவி முருகேஸ்வரி ஆகியோா் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.