காரைக்குடி அருகே புதுவயல் (சாக்கவயல்) பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக. 20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவயல், கண்டனூா், பெரியகோட்டை, செங்கரை, வேங்காவயல், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூா், ஊறவயல், மாத்தூா், இலுப்பகுடி, பொன்நகா், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்துள்ளாா்.