தேனி

பைக்குடன் பள்ளத்தில் விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

DIN

 சிவகங்கை அருகே சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனாா் விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தியைச் சோ்ந்தவா் சேதுராமன் (45). கட்டடத் தொழிலாளியான இவா், இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து வியாழக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பனையூா் அருகே பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனது இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளாா். இரவுநேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை.

நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் பாலம் கட்டும் பணிக்காக வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, சேதுராமன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலா்கள் சேதுராமனை மீட்டு உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT