சிவகங்கையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை சாத்தப்பா் தெருவைச் சோ்ந்தவா் அன்னபூரணம்(85). இவா் கணக்கெடுப்பு (சா்வே) அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன. விசாரித்தபோது இவரது வீட்டில் வேலை செய்த சிவகங்கை சின்னச்சாமி தெருவைச் சோ்ந்த சீனிவாசன்(22) என்பவா் தான் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனா்.