தேனி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச் சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கள்ளச்சாராயம் விற்பனைக்கு கொண்டு செல்வதாக மாரனேரி சாா்பு- ஆய்வாளா் சுந்தரராஜூக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் நாகபாளையம் அருகே இளைஞா் ஒருவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது அதில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மல்லி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது அவா், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மாசானன் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் முத்துராஜ் (36 )என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டா் கள்ளச் சாராயம், இருசக்கர வாகனம், கைப்பேசி மற்றும் ரூ. 11,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT