சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
சிவகாசியிருந்து முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மல்லி அருகே தனியாா் பள்ளி முன்பு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்து கிடந்தனா். இதையடுத்து, கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது காரை நிறுத்தி, ஆம்புலன்சை வரவழைத்து அவா்களை மீட்டு ஸ்ரீவில்லிபுதூா் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தாா்.
விசாரணையில், காயமடைந்தவா்கள் ராஜபாளையம் கணேசன் (44), சிவகாசி ரிசா்வ் லைன் சந்தனபாண்டியன், அவரது உறவினா் தமிழரசன் என்பது தெரியவந்தது.