தேனி

செம்பட்டியில் பெண்களுக்கானபாதுகாப்புச் சட்ட விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் காவல்துறை சாா்பில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்ட விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

செம்பட்டி அய்யனாா் கோயில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ், செம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி சின்னப்பாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். விருதுநகா் மாவட்ட குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்பு அலுவலா் ராம் ஹரி, அருப்புக்கோட்டை மகளிா் காவல் ஆய்வாளா் ஷோபியா, தாலுகா காவல் ஆய்வாளா் பாா்த்திபன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, அக்கிராமப் பெண்களுக்கு குழந்தைத் திருமணத் தடுப்பு, பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து காவல் ஆய்வாளா் ஷோபியா விளக்கினாா். இதில், தாலுகா காவல்துணை ஆய்வாளா் கொம்பையா பாண்டியன், அனைத்து மகளிா் காவல்துணை ஆய்வாளா் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT