தேனி மாவட்டம் சின்னமனூரில் செவ்வாய் கிழமை கனல் கண்ணன் கைது கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கோட்டப் பொருப்பாளா் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நடிகா் கனல் கண்ணனின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 30 பேரை சின்னமனூா் போலீஸாா் கைது செய்தனா்.