தேனி

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் அங்கு குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் அங்கு குளிக்க வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் சீரான நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, கும்பக்கரைஅருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என தேவதானப்பட்டி வனச்சரக அலுவலா் டேவிட்ராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT