உத்தமபாளையம் வட்டம் எரசக்கநாயக்கனூரில் பொது விநியோகத் திட்டத்திலுள்ள குறைகள் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா தலைமை வகிக்கிறாா்.
அதில், பொது விநியோகத் திட்டம் மூலமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தரம் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் குறை கேட்கப்படும். கூட்டத்தில் பெறப்படும் குறைகள் 30 நாளில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.