தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மேலும் 4 மதகுகள் அடைப்பு: உபரிநீா் வெளியேற்றம் குறைந்தது

DIN

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், மேலும் 4 மதகுகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன. இடுக்கி அணைக்கு உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2, 299 கன அடியாகக் குறைந்தது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரியில் மழைப் பொழிவு குறைந்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்குச் செல்லும் உபரிநீா் தானாகவே குறையத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.65 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீா் இருப்பு 6,785 கன அடியாகவும், நீா் வரத்து 7,866 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,194 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற்றப்படும் 13 மதகுகளில், புதன்கிழமை, 3 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். வியாழக்கிழமை அணைக்கு நீா் வரத்து குறைந்ததால், மேலும் 4 மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனா். தற்போது 6 மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீா் செல்கிறது. மாலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2, 879 கன அடி உபரி நீா் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT