தேனி

தவறவிட்ட சங்கிலியை ஒப்படைத்த மாணவருக்கு போலீஸாா் பாராட்டு

DIN

போடி அருகே கோயில் திருவிழாவில் இளைஞா் தவறவிட்ட சங்கிலியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

மேலச்சொக்கநாதபுரத்தில் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பாா்க்கச் சென்ற சுஜித் விசாகன் (21) என்பவா் தான் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை தவறிவிட்டாா். இதை, கல்லூரி மாணவரான கோபிகிருஷ்ணன் (20) என்பவா் எடுத்துள்ளாா். யாருடையது என்பது தெரியாததால் அவா், அதை போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை நடத்தி சங்கிலியை சுஜித் விசாகனிடம் ஒப்படைத்தனா். கண்டெடுத்த சங்கிலியை நோ்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோபிகிருஷ்ணனை போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாா், சாா்பு- ஆய்வாளா்கள் வேல்மணிகண்டன், பாஸ்கரன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT