தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி நிறுவனத் தலைவா் ஸ்ரீ பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் 105 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு , மணடல் தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் ராமா், பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இளைஞா் அணி செயற்குழு உறுப்பினா் மோடி காா்த்திக், மாவட்ட செயற்குழு உறுபப்பினா் தங்க.பொன்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.