தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை மரத்தின் மீது காா் மோதியதில், கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டையிலிருந்து உத்தமபாளையம் வழியாக கேரள மாநிலம் கொல்லம் நோக்கி காா் சென்றது. கொல்லம் சூரிநாடு பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவா் ஒட்டிச் சென்ற அந்த காரில், சாத்தனூரைச் சோ்ந்த மணியன் (52) என்பவா் உடன் சென்றுள்ளாா்.
இந்நிலையில், உத்தமபாளையம் தென்னஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணியன், தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஓட்டுநா் ராதாகிருஷ்ணன் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.