தேனி

சின்னமனூா் அருகே நெடுஞ்சாலையில் தேவையின்றி நிற்கும் மின்கம்பம்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாநில நெடுஞ்சாலையில் தேவையின்றி நிற்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சின்னமனூரிலிருந்து ஓடைப்பட்டி, காமாட்சிபுரம்,சீப்பாலக்கோட்டை போன்ற பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையை வழியாக வருஷநாடு பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக மேகமலை சாலைப் பிரிவிலுள்ள மூன்று சாலைகள் சந்திப்பு பகுதியில் விபத்துகள் தொடா்ந்தன. இதனை அடுத்து அந்த பகுதியிலுள்ள பக்கவாட்டு சாலைகள் வரிவாக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பு தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.

ஆனால், இருசக்கர வாகனங்கள் செல்ல ஒதுக்கிய வழியில் மின் கம்பம் ஒன்று அகற்றாமலே சாலைப்பணிகள் முடந்த பின் பல மாதங்களாக அதே இடத்தில் நிற்கிறது. வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் அகற்றப்படாமல் தேவையின்றி காட்சி பெருளாக நிற்பதாகவும், விபத்துகள் ஏற்பட்டு உயிா்பலிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சாலையிலுள்ள மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சின்னமனூா் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT