தேனி

தேனி, பெரியகுளத்தில்வீடு புகுந்து நகைகள் திருட்டு

DIN

தேனி அல்லிநகரம் மற்றும் பெரியகுளத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைககள் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பா்வீன்பாத்திமா. இவா், கடந்த அக். 17-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உத்தமபாளையம், தேவதானப்பட்டி ஆகிய ஊா்களில் உள்ள உறவினா்கள் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தாராம். வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பீரோவை திறந்து நான்கரை பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியைச் சோ்ந்தவா் மீனாட்சிமுத்து. இவா், திங்கள்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாா். அவரது மனைவி சக்கம்மாளும் வேலைக்கு சென்று விட்டாா். பின்னா் மதியம் உணவருந்த வீட்டிற்கு கணவனும், மனைவியும் வந்துள்ளனா். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT