தேனி மாவட்டம், வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், ஹைவேவிஸ், மேகமலை, மணலாா்,மேல் மணலாா், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா் கேம்ப் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, சின்னமனூா் மின்பகிா்மானச் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.