பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வெறிநாய் கடித்ததில் சிறுவன் வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
தேவதானப்பட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் பாலகேஸ்வரன் (6). இச்சிறுவன் கடந்த 6ஆம் தேதி தனது நண்பா்களுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த தெருநாய் கூட்டம் சிறுவா்களைக் கடித்தது. இதில், பாலகேஸ்வரன் கழுத்தில் கடித்ததால், பலத்த காயமடைந்த சிறுவன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உயிரிழந்துவிட்டான்.