தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 15 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
மேலச்சொக்கநாதபுரம், டி. பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 15, 17, 18 வயதுடைய 3 சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்ாக தேனி மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் புகாா் அளித்தாா். இதன் பேரில், அந்த சிறுமிகளை திருமணம் செய்து கொண்ட மணமகன், திருமணம் நடத்தி வைத்த அச்சிறுமிகளின் பெற்றோா், உறவினா்கள் என மொத்தம் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.