தேனி

க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பதவிக்காக வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தோ்தல், போதிய உறுப்பினா்கள் வருகை இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

க.மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலானது, தோ்தல் அலுவலா் பரமசிவம் முன்னிலையில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்குள் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதிய எண்ணிக்கையில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வருகை தராததால், தோ்தலை ஒத்திவைப்பதாக தோ்தல் அலுவலா் அறிவித்தாா்.

அப்போது, அதிமுகவைச் சோ்ந்த க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சந்திரா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முருகன், அன்னபூரணி ஆகியோா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை, அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூடியே பிற்பகல் 2.20 மணிக்கே ஒத்திவைத்ததாகப் புகாா் தெரிவித்து, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்: அதிமுகவைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா், உறுப்பினா்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள், வட்டார வளா்ச்சி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தரக்குறைவாகப் பேசியதாக புகாா் தெரிவித்து, க.மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடமலைக்குண்டு காவல் நிலைய ஆய்வாளா் குமரேசன் அவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தி சமரசம் செய்ததையடுத்து, ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT