தேனி

20 மாதங்களுக்கு பிறகு கம்பமெட்டுக்கு பேருந்து இயக்கம்

DIN

இருபது மாதங்களுக்குப் பின் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டுக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனை, நெடுங்கண்டத்திற்கு 3 பேருந்துகள் அரசு போக்குவரத்து கழக கம்பம் பணிமனை சாா்பில் இயக்கப்பட்டன. அதே போல் கேரள அரசு சாா்பில் கட்டப்பனையிலிருந்து கம்பத்துக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 22 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து சுமாா் 20 மாதங்களாக தமிழகம் -கேரளம் இடையே போக்குவரத்து நடைபெறவில்லை. இந்நிலையில், புதன்கிழமை காலை 6.30 மற்றும் மாலை 5 மணிக்கு கம்பத்திலிருந்து கம்ப மெட்டுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள ஏலத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்குச் செல்லும் கூலித்தொழிலாளா்களுக்காக கம்பமெட்டு வரை பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து கேரளப் பேருந்துகளில் கேரள பகுதிகளுக்குச் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT