பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் கூறியது: ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் பிரதமரின் ஏழை, எளிய மக்களுக்கான ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், மொத்த வீடுகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஊரகப் பகுதிகளில் வீடற்ற ஏழை, எளிய சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தில் வீடுகள் பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்றாா்.