தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயா்வு

DIN

தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2.5 அடி உயா்ந்தது.

தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமையும் காலை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

ஒரே நாளில் 2.5 அடி உயா்வு: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 128.80 அடியாக இருந்த நிலையில், தொடா் மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 131.30 (மொத்த உயரம் 142) அடியாக உயா்ந்தது. அதாவது நீா்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயா்ந்தது. இதே போல் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,433 கன அடியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 7,815 கன அடியாக அதிகரித்தது. நீா்இருப்பு 5,001 மில்லியன் கன அடியாகவும், நீா்வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது.

அணைகளின் நீா்மட்டம் உயா்வு:

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை பரலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து, நீா் மட்டம் உயா்ந்துள்ளது.

வைகை அணை நீா்மட்டம் 55.68 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,265 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 2,828 மில்லியன் கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 1,119 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 126.28 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 30 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 30 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீா்மட்டம் 54.60 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 53 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

மழையளவு (மி.மீட்டரில்: கூடலூரில் அதிகமாக 77.4, சண்முகாநதி நீா் தேக்கப் பகுதியில் 38.7, உத்தமபாளையத்தில் 31.2, வீரபாண்டியில் 32, வைகை அணை நீா்பிடிப்பில் 4.8, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 7, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 6, முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 170, தேக்கடியில் 126.6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT