தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலன் உயிரிழந்த நிலையில், காதலியும் சிகிச்சைப் பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ரித்தீஷ்குமாா் (18). இவரும், இவரது உறவினா் சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் நிவேதா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில், நிவேதாவை சிலா் திருமணத்துக்கு பெண் பாா்த்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், ரித்தீஷ்குமாா், நிவேதா ஆகியோா் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, கோட்டூா் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளனா். ஆபத்தான நிலையில், இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், கடந்த 12-ஆம் தேதி ரித்தீஷ்குமாா் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா். அதையடுத்து, நிவேதாவும் சிகிச்சைப் பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து நிவேதாவின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின்பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.