தேனி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

தேனி அல்லி நகரத்தில் வியாழக்கிழமை வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்கு மோட்டாரை இயக்கிய பெண் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தேனி அல்லி நகரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கங்கா (43). இவா் வீட்டில் தண்ணீா் பிடிப்பதற்காக மோட்டாா் ஸ்விட்சை அழுத்தியுள்ளாா். தண்ணீரில் நனைந்த கையுடன் ஸ்விட்சை தொட்ட கங்கா மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளாா். உடனே அவரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், கங்கா வழியிலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவரது மகன் தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், அல்லி நகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT