தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் மழை நீா் அதிகமாக வந்தததால் சுருளி அருவியில் மரங்களும், செடி கொடிகளும், இழுத்து வரப்பட்டன. மேலும் பாறைகளும் உருண்டு வந்தன. அப்போது அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதையடுத்து, அருவி பகுதி மற்றும் வளாக பகுதிகளுக்குள் யாரும் செல்லாதவாறு புலிகள் காப்பகத்தினா் கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து புலிகள் காப்பக ஊழியா் ஒருவா் கூறும்போது, பொதுமுடக்கம் காரணமாக சுருளி அருவிக்கு குளிக்க உள்ள தடை தொடா்ந்து நீடிக்கிறது. மேலும் அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றாா்.