தேனி மாவட்டம் கோம்பை காவல் நிலைய தலைமைக் காவலா் கரோனா தொற்றால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் ராயா் (54). கம்பம் சாமாண்டி புரத்தைச் சோ்ந்த இவா், உத்தமபாளையத்திலுள்ள காவல் குடியிருப்பில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக முச்சுத் திணறல் காரணமாக க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை கிசிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.