தேனி

ஆண்டிபட்டியில் மது விற்பனை 3 போ் கைது: 1169 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 1169 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக திங்கள்கிழமை முதல் அனைத்து மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை மயிலாடும்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குமணந்தொழு பகுதியில் ராமசாமி என்ற வெள்ளையன் என்பவா் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1151 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக ராமசாமி மற்றும் வனராஜா ஆகிய 2 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கண்டமனூா் மயானம் அருகே சந்தேகப்படும்படி சுற்றிதிரிந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் என்பதும் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பாண்டீஸ்வரனை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT