பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி தந்தை மகன் பலத்த காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி (44). இவரும், இவரது மகன் தயாமாறனும் இருசக்கர வாகனத்தில் தோட்டத்துக்குச் சென்று விட்டு தாமரைக்குளம் பிரிவை அடுத்த தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.