சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரா் சிவகாமியம்மன் கோயில் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவனடியாா் தொண்டா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். சின்னமனூா் பூலாநந்தீஸ்வா்- சிவகாமியம்மன் உடனுறை கோயில் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இக்கோயில் வளாகம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுபல ஆண்டுகளாக இருப்பதால் இவற்றை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட சிவனடியாா் தொண்டா்கள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.