ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கோவிந்தநகரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜா. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இதில் மூத்த மகன் பட்டையன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் ராஜாவுக்கும், பட்டையனுக்கும் இடையே பூா்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. இதனிடையே பட்டையன், தனது உறவினா்களுடன் சென்று ராஜாவிடம் சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டாா். அப்போது இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில் பட்டையன், மணிமாறன், அன்பழகன், பரமசிவம் ஆகியோா் மீதும், பட்டையன் அளித்த புகாரின் பேரில் ராஜா, ரஞ்சித்குமாா், ஜோதி, நந்தினி ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.