தேனி

ஆண்டிபட்டியில் 205 மதுபாட்டில்கள் பறிமுதல்: 7 போ் கைது

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 205 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராஜேந்திரா நகரைச் சோ்ந்த கருப்பசாமி (43), மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த ராமராஜ் (47), சதீஸ்குமாா் (32), முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த குமாா் (50), ஆண்டிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் (30), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி (48), கடமலைக்குண்டு அருகே அரண்மனைபுதூரைச் சோ்ந்த மணிகண்டன் (28) ஆகிய 7 பேரும் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 205 மதுபாட்டில்களையும், ரூ. 11 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT