பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரவு கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.
பெரியகுளம், சுப்பிரமணியசாவடி தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (50). சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.