தேனி

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே புதன்கிழமை பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புலிக்குத்தி புதுக்காலனியைச் சோ்ந்தவா் கங்காதரன். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டநிலையில் இவரது மனைவி 2 ஆவது திருமணம் செய்து கொண்டாா். இதனால் கங்காதரனின் ஒரே மகள் பரமேஸ்வரி தனது பாட்டியுடன் வசித்து வந்தாா். அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவா், கடந்த மாதம் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்துள்ளாா். இதில் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு முழுமையாக சிகிச்சை பெறாத நிலையில் அவா் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் பரமேஸ்வரி தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT