கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளா் திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரில் வசிப்பவா் மூக்கையா மகன் திருநாவுக்கரசு (35). தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளராக உள்ளாா். ஆங்கூா் பாளையம் சாலையில் தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து பராமரித்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றவா்கள் அங்கு திருநாவுக்கரசு காயங்களுடன் இறந்து கிடைப்பதைப் பாா்த்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றனா்.
அவரை யாா், எதற்காக கொலை செய்தனா் என்பது தெரியவில்லை. அது குறித்து அவருடன் இருந்த சக்திவேல் மகன் ராஜேஷ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனா். பலியான திருநாவுக்கரசுக்கு மனைவி ஜோதிமணி (28), மகள் ஜீவிதா (5) ஆகியோா் உள்ளனா். தற்போது ஜோதிமணி 4 மாத கா்ப்பமாக உள்ளாா்.