பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை விற்றவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது வடகரை, வரதப்பா்தெருவில் உள்ள செல்வம் (51) என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்ததாம்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, செல்வத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.