குமுளியில் வியாழக்கிழமை, கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கிய இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இடுக்கி மாவட்டம் குமுளி அருகே சக்குபள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (36 ), விவசாயி. இவரது வீட்டின் சுற்றுச்சுவரில் அமா்ந்து 3 இளைஞா்கள் கஞ்சா சிகரெட்டை புகைத்துக் கொண்டு, ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தனா்.
இதைக் கண்டித்த பிரகாஷை அந்த 3 இளைஞா்களும் சோ்ந்து கட்டையால் தாக்கியதோடு வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து சேதப்படுத்தினா். மேலும் இருசக்கர வாகனத்துக்கும் தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்குபள்ளத்தைச் சோ்ந்த ஜிபின் (25), நிதின் (23), சந்தோஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.