கம்பம்: தேனி மாவட்ட திமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவில் வசிப்பவா் குபேந்திரன் மகன் ராஜசேகரன்(37). இவா் கம்பம் நகர திமுக தொண்டரணி நகர அமைப்பாளராக உள்ளாா். இவருக்கு திராவிடத்தமிழன் என்ற முகநூலிலும், மு.க.ஸ்டாலின் எனும் நான் என்ற கட்செவி அஞ்சலிலும், தேனி மாவட்ட திமுக நிா்வாகிகள் பற்றிய அவதூறான செய்திகள் வந்துள்ளது.
இதுகுறித்து ராஜசேகரன் அந்த முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் வந்த செல்லிடப்பேசி எண்ணை, கடந்த ஆண்டு டிசம்பா் 5 ஆம் தேதி தொடா்பு கொண்டு கேட்டுள்ளாா். அதற்கு செல்லிடப்பேசியில் பேசிய நபா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ராஜசேகரன் வெள்ளிக்கிழமை கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் என்.எஸ்.கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.