தேனி

ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பெற்றோா் கண்டித்ததால் மன வேதனையடைந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் விஜயகுமாா் (17). இவா், தேனியில் உள்ள தனியாா் கல்லூரியில் பாா்மஸி முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் ஆங்கில வழி கல்வி புரியாமல் இருந்து வந்ததாகவும், அதற்காக பெற்றோா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த விஜயகுமாா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT